Monday, 7 February 2011

யாழ் நகரவீதியில் நாம்

யாழ் நகரவீதியில் நாம்
சுற்றித் திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று

காற்று வாங்கிய நேரங்கள்

நல்லூர்க்கந்தன் வீதியில்
நாம் கம்பன்கழகம் பார்த்ததும்
ராஜாத்தியட்டர் அரங்கிலே
களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி
வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளில் சுற்றியது
என் நெஞ்சில் சுற்றுதடா (2)

சட்டநாதர் கோயிலில்
அருணா கோஷ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில்
அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை
சின்னவயசில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோயிலில்
மாவிளக்கு போட்டதும்

கீரிமலைக் கடலிலே
நீச்சல் பழகப் போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு
சண்டைபிடித்து ஓடியதும் (2)
தட்டிவானில் ஏறி
சந்நிதி கோயில் போனதும்
அன்னதான மண்டபத்தில்
வரிசையாக நின்றதும்

பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
பங்குனித் திங்கள் பொங்கலும்
வல்லிபுரக் கோயிலின்
நாமம் அள்ளிப் பூசியதும்
நாகர் கோவில் மண்ல்காடு
சவுக்கங் காட்டுத்தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது
என் நெஞ்சில் நிக்குதடா (2)

துர்க்கை அம்மன் கோயிலில்
பிரதட்டை அடித்ததும்
மாரி அம்மன் கோயிலில்
தீவெட்டி பிடித்தததும்
சுட்டிபுரம் அம்மன் கோயில்
சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோயிலுக்கு
வள்ளத்தில் போனதும்

விக்னா டியூஷன் போனதும்
Science Hall இல் படித்ததும்
நேற்றுப் போல தெரியுது
இது வாழ்வில் மறக்குமா (2)
பள்ளிக்கூடம் போகாமல்
Big Match பார்க்கப்போனதும்
வாத்தியாரைக் கண்டதும்
கூட்டத்திலே மறைந்ததும் (2)

யாழ்நகர வீதியில் நாம்
சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று

காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர்க்கந்தன் வீதியில் நாம்
கம்பன் கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில
Colors Night பார்த்ததும்

லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி
வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது
என் நெஞ்சில் சுற்றுதடா (2)

யாழ்நகர வீதியில் நாம்
சுற்றித் திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று . . . . . .
காற்று வாங்கிய நேரங்கள் . . . . . .

No comments:

Post a Comment